Thursday 18 December 2014

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-2

இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகனும்"
"நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்"
"என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.
அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.
டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.
இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.
அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.
"தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.
"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார்.
பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க
ஆரம்பித்தான்.
ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.
"ஹலோ முதியோர் இல்லமா?"
"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"
"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக"
முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .
'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.
------------------------------------நன்றி யாரோ ஒருவர்

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-1

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும்
நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்
இருந்தன.
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்
செல்லவும்."...
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப்
போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்
தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.
தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று
விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்
இன்பமயமாகி விடுமல்லவா?

Friday 28 November 2014

Tamil Kavithai - Enaku Vidai Naane(எனக்கு விடை நானே)

தோற்றமோ மாற்றமோ  நிலைகளோ நியதியோ
தினம் தோன்றும் எண்ணப் பிழைகளோ
என்னவென்று நானறியேன்

என் வார்த்தைகள் என்னுடன் பேசுகின்ற சத்தம் மனதில்
சிறு புன்னகை முகத்தில் பதித்து, மன அலைகளை நிறைத்தேன் விழியில்
பெற்றோர்க்கு புதிதானேன் நண்பர்களுக்கும் புதிரானேன் 
உயிர் தோழிக்கும் கேள்வி குறியானேன், எனக்கு நானே பதிலானேன்


வெறுமை களைந்து , கனவுகள் அணிந்து
புதிய கண்ணோட்டத்தில் அன்றாட செயல்கள் காண
பாதைகள் கண்டேன் -அவை
என்னை வரவேற்று அணைக்கக் கண்டேன்

நல்ல மாற்றங்களால் தினம்
நாட்களை அலங்கரிக்கும்
கலையை கற்றேன்
கவலை மறந்தேன்

வலிகள் என்னை சந்திப்பதுண்டு
சில நேரம் வந்து போகும் தலைவலி போல
சில நட்புகள் தந்து போவதுண்டு
மருந்து போன்ற உடனிருப்பை


உலகம் அழகு வரங்கள் பெரிது –இங்கு
அலைபாயாமல் , அதிகம் யோசிக்காமல்
அமைதியாய் நன்றி சொல்ல
காரணங்கள் கணக்கற்றது நாம் நினைத்தால்

என்னை தேடிவரும் எனக்கான நன்மைகள் தினம்
அவற்றை அனுபவித்துச் செல்வதேயன்றி
என்னை தொலைத்து எதையும் தேட
என்றும் அவசியம் இல்லை உலகில்

விமர்சனங்களை கண்டு சிரிக்கிறேன்
வலிமையை உணர்கிறேன்
பரிந்துரைகள் ஏற்கிறேன் -ஆனால்
என்னை நானே இயக்குகிறேன்

கடவுளில் துணை உண்டு காலத்தின் திட்டம் உண்டு
என்றும் குறையாத அன்பு உண்டு, எதையும் கடக்கும் துணிவு உண்டு
என் நாட்களை அழகாக்குவதன்றி –இங்கு

எனக்கொரு பொறுப்புமில்லை

By, 
CARMEL FELIXIA R

Tamil Kavithai- Pirivugal En Parvaiyil (பிரிவுகள் என் பார்வையில்)

சிறகிலிருந்து பிரியும் ஓர் இறகு
மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை
மேகத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளி


ஏனோ வார்த்தைகளின்றி ஊமையான இவற்றால்
சத்தமாய் அறிவிக்க முடியும் நிஜங்களை


விரிந்த சிறகில் சேர்ந்து அந்த இறகு வானில் பறந்த நாட்கள் பொய்யன்று
தனியாய் உதிர்கையில் காற்றில் அது எழுதிச் செல்லும்
நினைவுகளின் காவியமும் பொய்யன்று

அடர்ந்த மரத்துடன் சேர்ந்து இலை துளிர்த்து பசுமையில் திளைத்தது செழித்தது பொய்யன்று
அதே மரத்தின் உரமாய் மாற வாடி உதிர்கையில் அது வரைந்து செல்லும் பிரிவின் துயர் பொய்யன்று

நீல மேகத்தின் பரப்பில் அந்த தூய நீர்துளி மிதந்த கதை பொய்யன்று
உலகம் மகிழ அது தன்னைப் பிரித்து உவர் கடலில் விழும் காட்சியும் பொய்யன்று

இனிய இறந்தகால பக்கங்களின் மனிதர்களும் மகிழ்வுகளும் நிகழ்வுகளும் நட்புகளும் நானும் பொய்யன்று

இந்த நிகழ்காலத்தில் தொடரும் மாறா நினைவுகளும் பிரிவுகளும் மாற்றங்களின் தேவைகளும் பொய்யன்று

Tuesday 1 July 2014

Facebook Posts



Wednesday 18 June 2014

Learn 5 Words a day

1.Mar-  to damage or to spoil Something good

Example: The Opening Ceremony of the world cup was marred by the protesters. 

Synonyms:  Blight , Ruin
  • Blight: His Company has been blighted by his enemies.
  • Ruin: The rain ruined the match between India and Srilanka.

2. Squander- to waste money,time etc.,

Example: The team squandered several good scoring chances


3. Lavish- large in amount, impressive

Example: He lives a lavish lifestyle.
 
Synonyms: Extravagant, Luxurious

  • Extravagant: My Dad warned me not to be extravagant with water
  • Luxurious: My friend wants a luxurious life. (Opposite: Spartan
4.Aggravate- to annoy somebody, to make an illness/Unpleasant situation.
Example: His worst behavior is very aggravating.


Synonyms: Irritate

5. Tantamount- to amount to as much, to be equivalent , having the same bad effect as something else.

Example: If he resigned it would be tantamount to admitting that he was guilty.

Thursday 12 June 2014

Funny Facebook Posts



Thursday 3 April 2014

எனது ஆசை

அவள் எனது தாலியை சுமக்க
தொடங்கிய நிமிடத்தில்
இருந்து
அவளது வாழ்வில்
துக்கம் , சோகம் , கவலை ,
அழுகை
போன்ற வாக்கியங்கள் அவள்
அகராதியில் இருந்து நீங்க
வேண்டும் .
என்னை மனதார தாங்கியவள் அவள்
அவளே எனது முதல் குழந்தை
அவளை நான் என்
மூச்சு உள்ளவரை சுமக்க
வேண்டும்
என் மார்பில்.....

Tuesday 18 February 2014

ஆசையோடு ஏற்று கொள்வேன்























ஆயிரம் ஆண்டுகள் தனியே
மரமாய்  மாறும் சாபமென்றாலும்
மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன்
பெண்ணே..!
என்னிழலில் ஒரு நொடியேனும்
நீ இளைப்பாருவாய் என்றால்!!
----------------------------------------------------------------------
என்னுடைய உலகம் என்றும்
               உன்னை சுற்றியே வட்டமிடும்..!
என்னுடைய பாதை யாவும்
               உன்னை மட்டுமே அணுகவிடும்..!
கண்விழிகள் இரண்டும் கூட
               உன் விழிகளையே தேடியோடும்..!
காந்தம்போல என்மனம் தினம்
               உன் நினைவையே கவர்ந்துவிடும்..!





Sunday 2 February 2014

Program to Copy and Paste files from one directory to another using Java programming

import java.io.*;
class FileInDemo
{
   public static void main(String as[]) throws Exception
   {
      File f=new File("F:/Images/"); //Directory Folder

      int a;
      File fa[]=f.listFiles();
      for( File faa: fa) //Enhanced For Loop
      {
      FileInputStream fis=new FileInputStream(faa.getPath());
      FileOutputStream fos=new FileOutputStream(faa.getName());
      while((a=fis.read())!=-1)
          {
            fos.write(a);
           }
       }
   }
}

Popular Posts