Saturday 6 May 2017

கிறுக்கல்ஸ்(Kirukkals)- Chapter 5- Time for Ghost Stories

Hello frnds..

To Read Previous Kirukals- Click Here

இதுவரைக்கும் கிறுக்கல்ஸ்-ல நிறைய என்ன சுத்தி இருக்கவங்கள பத்தி எழுதியாச்சு. so இந்த தடவ கொஞ்சம் unusual things that happened around me  பத்தி எழுதலாம்னு யோசிச்சு try பண்ணிருக்கேன். Keep Reading 




நம்மள்ல நிறய பேருக்கு ghost stories-ன பிடிக்கும். அதுனால தான எந்த பேய் படம் எடுத்தாலும் நல்ல ஓடுது.. அது மாதிரி எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருக்குறப்போ நிறய கதை , பாட்டி சொல்வாங்க.. கேட்கும் போது பயங்கர வீரனாட்டம் கேட்பேன்.. அதோட reaction என்னங்கிறது night  வந்தா  தான் தெரியும்.. அது எப்படி தான் night  திடீர்னு முழிக்கும் போது என்னைக்கோ யாரோ சொன்ன கதை நமக்கு ஞாபகம் வருமோ தெரியாது.. ஜன்னல் வழியா பாப்போம்.. அது சும்மாவே இருட்டா தான் இருக்கும் ஆனா நம்ப கண்ணுக்கு அன்னைக்கு மட்டும் புதுசா இருட்டு வர மாறியும் இதுல ஏதோ உருவம் தெரியுற மாறியும் தெரியும்.. :) அந்த மாதிரி முழிச்சி பார்த்த  நிறைய இரவுகள் இருக்கு.. உடனே ஓடிப்போய் அம்மா அப்பாக்கு நடுவில படுத்துகிட்டு போர்வையை இழுத்து மூடிக்கிட்டு தூங்கிடுவேன்- ஏதோ நான் இப்போ ரொம்ப safe ஆகிட்ட மாதிரி.. ☺   

இப்படி நிறய குட்டி குட்டி கதைகள் கேட்டு நிறய பயந்து இதெலாம் பொய்-னு நான் நம்ப ஆரம்பிக்கும் போது தான், ஏதோ ஒரு நியூஸ் பேப்பர்-ல ஒரு போட்டோ போட்டு article போட்டுருந்தாங்க .. அதுல ஒரு பையன் போட்டோ எடுத்தப்போ பின்னாடி ஏதோ உருவம் நிக்குற மாதிரி .. 
அத படிச்சதுக்கு அப்பறோம் எங்க இருந்து இதெல்லாம் பொய்னு நம்புறது.. அந்த பேப்பர அப்டியே தூக்கிட்டி போய் வெளிய தூக்கி போட்டதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு .. :P 

இது மாதிரி school 'ல பசங்க அடிச்சு விடுற stories இருக்கே.!!! அது அதுக்கு மேல இருக்கும்.. ஏதோ உண்மையா நடந்த மாதிரியே ஆளுக்கு ஒண்ணு அடிச்சு விடுவாங்க.. அதுல ஒரு பையன் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.. night 12 மணிக்கு மேல சுடுகாட்டுக்கு போனோம்னா அங்க Plus symbol-கு பக்கத்துல ஒரு பூ பூக்குமாம்.. அத பறிக்க போனோம்னா அந்த plus symbol நம்மள அடிக்க வருமாம்.. அதையும் மீறி எடுத்துடோம்னா அந்த பூ நாம என்ன கேட்டாலும் தருமாம்.. :) இது நான் 3rd standard படிக்கும் போது பசங்க சொன்ன கதை.. அப்பவே என்ன மாறி யோசிக்குறானுங்க.. இது உண்மைன்னு வேற கொஞ்ச வருஷம் நம்பிட்டு இருந்தேன் :P 



அப்பறோம் வளர வளர எனக்கு அதுல அவ்ளோ நம்பிக்கை இல்லாததனால அவ்ளோ பயப்பட மாட்டேன்.. அப்போ 10/12th படிச்சுட்டு இருப்பேன்னு நினைக்குறேன்.. எனக்கு எப்பவும் night படிக்குறது தான் பிடிக்கும். Morning எழுந்து நான் படிக்க மாட்டேன்.. so mostly 12 மணிக்கு மேல ஆகிடும் படிக்கும் போது.. அப்போ என் பாட்டி இருக்காங்களே.. ஒரு நல்ல 
advice சொல்வாங்க.. அது என்னனா.. 12 மணிக்கு மேல படிக்காத நடுபாதைல இருந்து.. ஏன்-னா சாமி வர time-னு.. :) சொல்லிட்டு அவங்க தூங்கிடுவாங்க.. நான் அதலாம் கண்டுக்காம படிக்கலாம்னு பார்த்து கரெக்டா மணி பார்க்கும் பொது 12 னு காட்டும் .. சரி யாராச்சும் முழிச்சு இருப்பாங்கன்னு பார்த்த எங்க வீட்டுல எல்லாரும் அசந்து தூங்கிட்டு இருப்பாங்க.. அப்பறோம் என்ன பண்றது.. வழக்கம் போல நமக்கு னு இருக்க weapon போர்வை-ய எடுத்து கண்ண இருக்க மூடி தூங்கிட வேண்டியது தான் .. :) இது ஒரு sample தான் அவங்க சொல்றதுல.. 



இது பரவலா என்னோட சொந்தகார பொண்ணு ஒருத்தவங்க கூட என் பாட்டி night தூங்கும் போது இது மாரி எதோ கத சொல்லிருக்காங்க.. அத கேட்டதுக்கு அப்பறோம் அவங்க ரூம்ல இருக்க ஜன்னல் எப்பவும் மூடி தான் இருக்கும் :) ஏன்-னு நான் சொல்லனுமா :)

அப்பறோம் ரொம்ப வருஷம் ஆகிடுச்சு.. நான் college-லாம் முடிச்சுட்டு job join பண்ணிட்டேன்.. இப்போலாம் room ல நான் மட்டும் தனியா தூங்குறது ரொம்ப கம்மியான நாட்கள் தான்.. அப்போல்லாம் எந்த பயமும் இருக்காது.. ஆனா ஒரு நாள் நான் மட்டும் இருக்கும் படி situation வந்தப்போ, நைட் செம மழை. Current cut வேற.. இதுல இடி சத்தம் வேற ரொம்ப பலமா  இருந்துச்சு.. இத்தனையும் சமாளிச்சு சரி எதோ சொல்லி மனச தூங்க வைக்கலாம்னு பாத்தா, மாடில இருக்குற இரும்பு கதவு டம்மு டும்மு-னு காத்துக்கு அடிச்சுட்டு இருந்துச்சு.. என்னடா கொடும இதுனு துங்கறதுக்காக காதுல headphone  மாட்டிகிட்டி சரி கொஞ்ச நேரம் watsapp பாக்கலாம்னு பாத்தா- எப்படி தான் கரெக்டா  gud nyt-னு  background-ghost picture வச்சி அனுப்புவாங்களோ தெரில. சரி இது ஏதோ எதார்த்தமா தான் நடக்குதுன்னு delete  பன்னிட்டு வேற குரூப் போயி பாத்தா  அங்க அத விட பயங்கரமான உருவத்தை அனுப்பி gud nyt சொல்ராணுங்க .. :) எப்டியோ அந்த nyt நல்ல படியா தூங்கிட்டேன்-ங்கிறது different story  :P  

இந்த மாதிரி நிச்சயம் எல்லாருக்கும் ஏதோ ஒரு அனுபவம் இருந்துருக்கும். சரி இது வரைக்கும் நான் கேட்டத சொன்னேன்.. இப்போ நான் நிஜமா experience  பண்ண ஒண்ண share பண்ண நினைக்குறேன். 



ஒரு நாள் நைட் time ஒரு 1'o clock இருக்கும். நான் என் வீட்டுல தூங்க போனேன்.. பக்கத்துல தான் என் தம்பி படுத்துருப்பான்  எப்பவும். அன்னைக்கு ஒரு strange experience நான் first time feel பண்ணேன். நான் தெளிவா முழிச்சுருக்கேன்.. ஆனா என்னால ஒரு குறிப்பிட்ட seconds-கு பேசவோ , கை கால் மாதிரி உடம்புல எந்த அசைவும் பண்ண முடியல.. கண்ணு மட்டும் முழிச்சு சுத்தி நடக்குறத பாக்க முடிஞ்சிச்சு ..நிச்சயம் இது கனவு இல்லை. அதே போல எனக்கு பயமும் வரல.. அது எந்த மாதிரியான நிகழ்வுன்னு என்னால சொல்ல முடியல.. ஆனா யார்டையும் இத நான் சொல்லல.. நான் அது கனவு-னு என்ன நானே சமாதான படுத்திகிட்டது தான் அதுக்கு காரணமா இருக்கும். But ரொம்ப நாள்-கு அப்பறோம் என்னோட friend கார்த்திக் அவனோட friend-கு நேத்து இப்டி நடந்துச்சுனு ஒண்ணு சொன்னான்.. அவன் முழிச்சு இருக்கான் ஆனா பேசவோ கை கால் அசைக்கவோ முடில னு சொன்னான் . அது மட்டும் இல்லாம கருப்பா ஏதோ உருவம் பாத்ததாவும் சொன்னான்னு என்கிட்ட  சொன்னான் .. அதுவும் குறிப்பிட்ட சில நொடிகள்னு சொன்னான்.. அதுக்கு அப்போறம் அவன் கத்தி எல்லாரையும் எழுப்பி விட்டதாவும் அப்பறோம் யாரும் தூங்கல-னும் சொன்னான். அப்போ தான் எனக்கு நடந்தது என்ன மாதிரியானதுன்னு netsearch பண்ணி பார்த்தேன். அதுக்கு பேரு sleep paralysis-uhm. இது எதுனால வருதுன்னு தெரிலனாலும் இது ghost /god  மாறியான நிகழ்வு இல்லனு போட்டுருந்தாங்க.       





இந்த மாதிரி ஏதாச்சும் strange experience உங்களுக்கும் ஏற்பட்டு இருந்தா share பண்ணுங்க. இதெல்லாம் உண்மையா இல்ல பொய்யா-ங்கிறது எல்லாமே ஒவ்வொருத்தவங்களோட நம்பிக்கைய பொறுத்தது.   இந்த கிறுக்கல்ஸ்'uh கொஞ்சம் shorta'வே முடிச்சுக்குறேன் சொல்ல நிறைய இருந்தும்.. :)   

இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப நன்றி. 
If possible will meet in my next kirukkals.. :) 

Thanks,

Anbuselvam

1 comment:

  1. Youtube, Videos, & Videos on Videosl - Vimeo
    youtube, videos, videos, and videos about your favourite videos on YouTube. youtube to mp4 youtube, video clips, and videos about your favourite videos on YouTube.

    ReplyDelete

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts